தேசிய அஞ்சல் தினத்தை ஒட்டி ,
சந்திரமாரி சர்வதேச பள்ளி
பள்ளி மாணவ மாணவிகள் நவீன தொழில்நுட்ப சாதனங்களை மறந்து கடிதம் எழுதி மகிழ்ச்சியை பரிமாறினார்.அஞ்சல் தலை மற்றும் நாணய கண்காட்சி மாணவர்கள் கண்டு வியந்தனர்,அஞ்சல் துறையின் சேவைகள் குறித்து முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கரன் பெருமிதத்துடன் பேசினார்.
கோயம்புத்தூர், அக்டோபர் 10
தேசிய அஞ்சல் தினத்தை ஒட்டி காளப்பட்டி சந்திரமாரி சர்வதேச பள்ளியில்கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்களுக்கு பிடித்த அவர்களுக்கு கடிதம் எழுதி மகிழ்தனர்.
கோவை காளப்பட்டி விளாங்குறிச்சி சாலையில் உள்ள சந்திரா மாரி சர்வதேச பள்ளியில் தேசிய அஞ்சல் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவை கோட்ட தபால் கண்காணிப்பாளர் சிவசங்கரன் தலைமை தாங்கி அஞ்சல்தலை மற்றும் நாணய கண்காட்சி துவக்கி வைத்து பேசினார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை பள்ளியின் முதல்வர் விஷால் பந்தாரி வரவேற்றார் நிகழ்ச்சியில் அஞ்சல் தலை மற்றும் நாணய சேகரிப்பு ஆர்வலர் செல்வராஜ் முன்னிலை வைத்தார்பள்ளியின் தலைவர் முரளி குமார் செயல் இயக்குனர்கள் விஜய் மற்றும் கௌதம். ஆசிரியர்கள் மாணவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள் .
நவீன தொழில்நுட்ப சாதனங்களில் இன்றைய இளைஞர்கள் அதிக ஈடுபாடு கொள்வது நடைமுறை ஆகிவிட்டது தேவையும் ஆகிவிட்டது அதே சமயத்தில் நாம் பாரம்பரியமான கலாச்சாரங்கள் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் கடிதம் எழுதும் நடைமுறையை இன்றைய குழந்தைகளுக்கு தெரிவிக்கும் வகையில் சந்திரா மாரி பள்ளி அஞ்சல் துறையுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது சமுதாயத்திற்கும் பெற்றோருக்கும் குழந்தைகள் பங்களிப்பு உறவுகள் நட்புகளை நேசிக்கும் பண்புகளையும் அறிய செய்வோம் என்று பள்ளியின் தலைவர் முரளி குமார் வாழ்த்து செய்தியாக தெரிவித்தார்
தபால் பெட்டியில் மாணவ மாணவிகள் கடிதங்கள்
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பெற்றோர்களுக்கும் என விருப்பமானவர்களுக்கு எழுதிய கடிதம் காளப்பட்டி தபால் நிலையத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட தபால் பெட்டியில் மகிழ்ச்சியாக போட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்
தேசிய அஞ்சல் தினம்
இன்று உலக அஞ்சல் நாள் . சுவிசர்லாந்து பேர்ன் நகரில் 1874-ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது. அந்த நாளை உலக அஞ்சல் தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அக்டோபர் பத்தாம் தேதி தேசிய அஞ்சல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது,அந்த வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் வாரமாக அக்டோபர் 9 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. தபால் தலை சேகரிப்பில் பலர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால்,விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை மேற்கொண்டு தபால் துறை தனது மக்கள் சேவையை தொடர்ந்து வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமம், நகரம் வித்தியாசமின்றி இந்தியாவை, மக்களின் கலாசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியை தபால்துறை செய்து வருகிறது. பொது மக்களிடம் கடிதம் எழுதும் பழக்கம் தொலைபேசி , வாட்சப், இ-மெயில் வரவால் குறைந்திருந்தாலும், தபால் வழியாக அனுப்பப்படும் அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.
Leave a Reply