கோவை மாநகரத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியரை அவர்தம் பெற்றோர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளிகளில் இறக்கி விட்டு செல்லும் போதும், மீண்டும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் முழுமையாக சாலை விதிகளை கடைபிடிக்காமலும் சீட் பெல்ட் மற்றும் தலைகவசம் அணியாமலும் செல்கின்றனர். எனவே கோவை மாநகர காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 21 நாட்கள் சவால் என்ற புதிய திட்டம் துவக்கங்கப்பட்டுள்ளது.
இதில் கோவை மாநகரத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு தங்கள் மாணவ, மாணவியருக்கும் அவர்தம் பெற்றோருக்கும் சாலைவிதிகளை முழுமையாக கடைபிடிக்க வலியுறுத்தியும், அதனை செயல்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply