தேசிய பார்வையிழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் பெண்கள் மற்றும் கிராமப்புறம் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாமை கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் துவக்கி வைத்தார். உடன் துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி, துடியலூர் அம்மா பேரவை பகுதிச் செயலாளர் கவிச்சந்திர மோகன், அண்ணா தொழிற்சங்க பகுதி செயலாளர் முருகேசன், வட்டக் செயலாளர் சாந்தி பூஷன், சுரேஷ், ஜெயக்குமார், காளி சாமி மற்றும் செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார்

Leave a Reply