, , ,

சோழவந்தான் அருகே, பழுதடைந்த சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை…..!

madhurai 1
Spread the love

சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் அருகே உள்ள சாலாச்சிபுரம் முதல் கருப்பட்டி ஊராட்சி கணேசபுரம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள கால்வாய் சாலை மோசமான நிலையில் உள்ளதால், சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, அம்மச்சியாபுரம், பொம்மன் பட்டி, கணேசபுரம், கருப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து நாச்சிகுளம் நரிமேடு கரட்டுப்பட்டி வாடிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாய இடு பொருள்கள் கொண்டு செல்லும் விவசாயிகள் ஆகியோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சாலையை சரி செய்யாததால், பல இடங்களில் குண்டும் குழியுமாகவும் அதிகமான இடங்களில் மேடு பள்ளங்கள் உள்ள நிலையிலும், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி போக்கு வரத்திற்கு பயனில்லாமல் உள்ளதாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர். ஆகையால், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் சாலையை நேரில் பார்வையிட்டு விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.