, , ,

மக்களை அச்சுறுத்தும் குரங்கு அம்மை: நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை…….

monkey
Spread the love

காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ள நிலையில், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
எம்.பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. ஆனால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. கொரோனாவைப் போல 2022 ம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய இந்த நோயானது முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது. தற்போது, மெல்ல மெல்ல 100க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியிருக்கிறது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தொற்று இல்லாத நாடுகளில் அதிகரித்து வரும் பாதிப்பை கருத்தில் கொண்டு, எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பது அவசியம் என்பதால் இந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை யடுத்து சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், “ இந்த தொற்றின் முக்கிய அறிகுறி தோல் அரிப்பு, சீழ் வழிதல். அதனுடன் 2-4 வாரங்கள் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, சோர்வு அடைதல், நிணநீர் கணுக்கள் வீக்கம் அடையலாம். எம்-பாக்ஸ் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்து பரவும். இந்த நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள பாதிக்கபட்டவருடன் நேரடி யாக தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி மூலமாகவும் இதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். கடந்த 21 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்த திரும்பிய எந்த வயதினராக இருந்தாலும் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, சோர்வு அடைதல், நிணநீர் கணுக்கள் வீக்கம் இருந்தால் அவருக்கு எம்-பாக்ஸ் தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களது பகுதியில் இந்த அறிகுறியுடன் யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என உறுதி செய்ய வேண்டும். இது மிகவும் அபாயகரமான தொற்று என்பதால் அரசு அல்லது தனியார் மருத்துவமனை ஊழியர்களும் தொற்று குறித்து உறுதி செய்யவேண்டும். தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கும் நபரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். குறிப்பாக காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுககு சோதனை செய்யவேண்டும். மருத்துவர்கள் எம்.பாக்ஸ் குறித்து அறிந்துகொண்டு இருக்க வேண்டும். கடந்த 21 நாட்களில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து வருபவர் களை மருத்துவ சேவைக்கு உட்படுத்த வேண்டும். வெளிநாட்டு தூதரகங் கள் விமான சேவை நிறுவனங்களுடன் இந்த தொற்று குறித்தான விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வெளி யிட்டுள்ளது.