உலக அளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், இனி வரும் காலங்களில் நிலத்தடி நீரும் குடிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் மிகச் சிறிய சதவீதமே நன்னீர். பல நாடுகளில், ஆறுகள் மற்றும் ஏரிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், நிலத்தடி நீரின் பயன்படுத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், புவி வெப்பமடைதல் காரணமாக நிலத்தடி நீரின் வெப்பநிலை மெதுவாக அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குளோபல் நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி நடத்திய ஆய்வின்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் நிலத்தடி நீர் வெப்பநிலை 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இதனால், நிலத்தடி நீர் வெப்பமடைவதால், நோய்க்கிருமிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வருங்காலத்தில் நிலத்தடி நீரும் மனிதர்கள் குடிக்க தகுதியற்றதாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், நிலத்தடி நீரை நம்பி இருக்கும் விவசாயம் மற்றும் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply