, , , ,

ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை…

ig
Spread the love

ஓய்வுபெற்ற காவல்துறை  ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் இன்று அதிகாலை முதல்  சிபிஐ அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்க வேல். கடந்த 1989-ஆம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்ச்சி பெற்று தமிழக காவல்துறையில் நேரடியாக டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர் பொன் மாணிக்கவேல் . பின்னர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு டிஜஜி, சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி என பல பதவிகளில் இருந்துள்ளார்.  கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி   ஓய்வு பெற்றார். சமீப காலமாக ஆன்மிக அமைப்புகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கோவில்களை நிர்வகிக்கும் அறநிலையத் துறையினர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகச் சாடி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, சென்னை நீலாங்கரை பாலவாக்கம் காமராஜர் சாலையில் வசிக்கும் பொன் மாணிக்கவேல் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.