, ,

ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு……

Madras-High-Court
Spread the love

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை செம்பூரில் என்.ஜி. ஆச்சார்யா மற்றும் டி.கோ. மராத்தா எனும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த மே1ம் தேதி ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் இந்தக் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், அந்த கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர், கல்லூரி முதல்வரிடம் விசாரித்தபோது, “இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகள் மத அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஆடைகள் அணிவதற்கு ஆடை கட்டுப்பாடு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. எனவே இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், என்.ஜி. ஆச்சார்யா மற்றும் டி.கோ. மராத்தா எனும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடம்பெற்றுள்ள அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் ஒரு இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கல்லூரியின் இந்த முடிவை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், ‘ மாணவ மாணவிகளிடம் ஒரே மாதிரியான ஆடைக் குறியீட்டை அமல்படுத்துவதற்கும் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் கல்லூரி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது இதனை அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக கருத முடியாது’ என்று தீர்ப்பளித்தது.