,

 மதுரை வாடிப்பட்டியில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

Madhurai 81
Spread the love

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு , தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக கருணை அடிப்படையில் பணி நியமனம், காலம் முறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டக்கிளை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். வட்டக்கிளை செயலாளர் அழகுபாண்டி விளக்கி பேசினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்டக் கிளை செயலாளர் வேல்மயில் வாழ்த்தி பேசினார். மாநில நிர்வாகி வளர்மதி நிறைவுறையாற்றினார். முடிவில், வட்டக்கிளை பொருளாளர் நவீன்குமார் நன்றி கூறினார்.