சட்டீஸ்கர் மாநிலத்தில் கோட்பார் ரயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு அதே ரயில் அங்கிருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்டு, அங்கிருந்து மீண்டும் கோட்பார் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோட்பார் ரயில் நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட்ட ரயில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரம் எண் 1ல் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கி பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் ரயிலின் ஏசி பெட்டியில் இருந்து கரும்புகை கிளம்பத் தொடங்கியது. நொடிப்பொழுதில் ரயில்பெட்டி முழுவதும் திகுதிகுவென எரியத் தொடங்கியது.பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். தீ வேகமாக பரவியதால் ரயிலில் பி6, பி7, எம்1 ஆகிய பெட்டிகள் தீயில் கருகின. ரயிலில் பயணிகள் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் திகுதிகு வென தீப்பற்றி எரிந்த ரயில் பெட்டிகள்… அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்!

Leave a Reply