, ,
RAGUL
Spread the love

நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, தனது தங்கை பிரியங்கா உடன்  கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையம்  வந்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டுக்கு, முன்னாள் வயநாடு தொகுதி எம்.பி.யும், தற்போதைய  மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம்   இன்று  காலை 10.30 மணியளவில் கேரளம் மாநிலம் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்தனர். வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு,  மீட்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவா்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், தற்காலிக முகாமாக செயல்படும் அரசுப் பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மேப்பாடி பகுதி மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.