கோவையில் மாநகரில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்ற மூன்று துணை நடிகர் மற்றும் இரு நடிகைகள் உட்பட ஐந்து பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன் பேரில் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் திடீர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர். அதில் அவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் அவர்களிடன் நடத்திய விசாரணையில், சினிமா துறையில் வேலை செய்யும் துணை நடிகர்களான கோவை புல்லுக்காடு பகுதியைசேர்ந்த யாசிக் இலாகி(26), போளுவாம்பட்டியைச்சேர்ந்த மரியா(31), சென்னையைச் சேர்ந்த வரும் தற்போது தொண்டாமுத்தூர் அடுத்த தாழியூரில் வசித்து வருபவருமான சினேகா ஸ்ரீ என்பது தெரியவந்தது. மேலும் இவர்களது கூட்டாளிகளான ஆர்.எஸ்.புரம் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணன்(24),சாரமேடு பகுதியைச்சேர்ந்த முஜிபூர் ரகுமான் (27) ஆகிய இருவர் ஐந்து பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 410 கிராம் கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள், 3 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ஐவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் கள்ளாமேடு பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆசிக்,ரிஸ்வான், வட மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் ஆகிய நால்வருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில் நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Leave a Reply