, ,

அவனியாபுரத்தில் அங்கன்வாடி கட்டிடம் புதிதாக கட்டித் தரக்கோரி பாஜகவினர் கலெக்டரிடம் மனு……

மதுரை
Spread the love

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், இன்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமுதாயப் பெரியோர்கள் தங்கள் பகுதிகளை உள்ள குறைகளை மனுவாக கொடுக்க வந்துள்ளனர். அதன்படி, மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவலிங்கம் பட்டியல் அணி மாவட்டத் தலைவர் முத்துமாரி, துணைத் தலைவர் கதிரேசன் உள்பட பலர் அவுனியாபுரம் 100-வது வார்டில் தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள அங்கன் வாடி கட்டிடம் உடையும் நிலையில் இருப்பதாகவும், உடனடியாக புதிய கட்டிடம் கட்டி தர கோரியும் , இந்த பகுதியில் பொது கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கிறது என்றும், உடனடியாக பொது கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரக் கோரியும், மேலும், பெண்களுக்கு தனி குளியறை வசதி செய்து தரப் கோரியும், மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம், மனு கொடுக்க வந்தனர்.