, ,

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு நடைபெற்ற வளைகாப்பு

valaikapu
Spread the love

கோவையில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் இந்து பிரியா. எட்டு மாத கர்ப்பிணியான இந்து பிரியாவுக்கு உடன் பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஆய்வாளர் சுமதி ஆகியோர் காவல் நிலையத்திலேயே வளைகாப்பினை நடத்தினர்.

இந்து பிரியாவுக்கு வளையல் அணிவித்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, 10 வகையான உணவுகளுடன் காவலர் இந்து பிரியாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்வை கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி முன்னின்று நடத்தினார்.

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், மகளிர் காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து அங்கு வந்து இந்து பிரியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.