கோவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும், இராசா அருண்மொழியை துணைத்தலைவராக கொண்டு தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நலதிட்ட உதவிகளை பெறுவதற்கு சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களில் 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமில் உள்ளவர்கள் ,அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி ஆகிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
Leave a Reply