ஆடி மாதத்தை ஒட்டி மூத்த குடிமக்கள் அம்மன் கோவிள்களுக்கு இலவச பயணம் செல்ல இந்து சமய அறநிலயத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இத்திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைத்தார்.
தற்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.
ஆடி மாத அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் , இந்த திட்டத்தின் கீழ், இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் நடப்பாண்டு சென்னை, மதுரை, திருச்சி தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்து பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆன்மீக பயணிகள் தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் ஆடி அம்மன் கோயில்கள் சுற்றுலா திட்டம் வரும் 17-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த ஒரு நாள் அம்மன் சுற்றுலா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள கோயில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாக அதிகாரிகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து பயணிகளை வரவேற்று, கோயில்களுக்கு அழைத்து செல்வார்கள் என அறிவிக்கப் பட்டுள்ளது.
Leave a Reply