,

மஞ்சுமெல் பாய்ஸ் பட பாணியில் 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நபர் மீட்பு

Manjummel Boys
Spread the love

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகர் பகுதியில் வீட்டுக் கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்கச் சென்ற கார்த்தி என்பவர் தவறி 100 ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடியவரை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி. அவருக்கு வயது 42, இன்று மாலை அவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று 100 அடி ஆழமுள்ள அவரது வீட்டு கிணற்றில் விழுந்துள்ளது.அதனை மீட்பதற்காக கார்த்தி கிணற்றுக்குள் இறங்கியபோது தவறி 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்துள்ளார். இது தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் நிலைய அலுவலர் கார்த்திகேசன், சுரேஷ்குமார், சதீஷ் கண்ணன் வேல்முருகன் மோகன்ராஜ் உள்ளிட்ட துறை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கத்தனர்.மேலும் ஆட்டுக்குட்டியையும் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.