,

கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன

voc park
Spread the love

கோவை வ.உ.சி வன உயிரியல் பூங்காவிற்கு உயிரியல் பூங்கா அந்தஸ்து இந்திய அரசால் மறுக்கப்பட்டதை தொடர்ந்து அதில் பராமரிக்கப்படும் வன உயிரினங்களை வனப்பகுதியில் விடுவித்திட தமிழக வனத்துறையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று புள்ளி மான்கள்  26 பிரத்தியேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சராகம் வனப்பகுதியில்   நல்ல முறையில் விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட புள்ளி மான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு  வருகிறது கோவை வனத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.