,

சூறைக்கற்றில் சேதமடைந்த பசுமைப்பந்தல் 

பசுமை பந்தல்
Spread the love
கோவையில் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட பசுமைப்பந்தல் சனிக்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றில் சேதமடைந்தது.
கோவையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், சிக்னல்களிலும், சோதனைச் சாவடிகளிலும் பசுமைப்பந்தல்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது. இதனிடையே கண்ணப்ப நகர் சோதனை சாவடியில் வெள்ளிக்கிழமை பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சனிக்கிழமை மதியம் முதல்  கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இந்த நிலையில் கண்ணப்ப நகர் சோதனை சாவடியில் அமைக்கப்பட்ட பசுமைப்பந்தல் முழுமையாக சேதமடைந்துள்ளது.