தமிழகத்தில் மே 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து 11ம் மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இந்த பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களையும் இணைந்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி, பின்னர் அனைவரும் துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றால், நடப்பு கல்வியாண்டில் கல்லூரியில் உயர் படிப்புக்கு சேர முடியும் என்பதால், தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே துணை தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Leave a Reply