,

கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததை ஐகோர்ட் விசாரணை

Spread the love

கோவை மக்களவை தொகுதியில் பெயர் இல்லாததை கண்டித்து வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க வேண்டுமெனவும், அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் கொடுத்துள்ளார். அதில், மக்களவை தேர்தலில் வாக்களிக்க வந்த அவர், வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் இல்லாததை தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலிலும், மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இம்முரை தனது பெயரும், மனைவி பெயரும் இல்லாததை பார்த்து, தனது மகள் பெயர் பட்டியலில் இருப்பதை தெரிவித்துள்ளார்.இதேபோல், தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் இல்லாததை கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போது,  அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை  குற்றம்சாட்டியுள்ளார்.

அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு சுதந்திர கண்ணன் தரப்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.