,

தமிழில் பிரதமர் மோடியின் கையெழுத்துடன் வாழ்த்து அட்டை

modi
Spread the love
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழில் பிரதமர் மோடியின் கையெழுத்துடன் வாழ்த்து அட்டை அனுப்பப்பட உள்ளது. .

தமிழர்களுக்கான இந்த வாழ்த்து அட்டையில் உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்ற தலைப்பில் வாழ்த்து செய்தி இடம் பெற்றுள்ளது. அதில்,”இந்த குரோதி வருட புத்தாண்டில்
புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
எல்லோர் வாழ்விலும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்”
என்று வாழ்த்து செய்தி இடம்பெற்றுள்ளது.

வீடு வீடாக தமிழ் புத்தாண்டில் தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் வீடு வீடாக கொடுக்க முடிவு செய்துள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.