கோவையில் புதிய அதிநவீன கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவுள்ளதாக என்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதி சேர்க்கப்ப்ட்டுள்ளது. விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர். தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமையும். இந்த மைதானம் சென்னையின் அடையாள சின்னமான எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply