, ,

கோவையில் பா.ஜ.க வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டதை கொண்டாடிய பாஜகவினர்

bjp
Spread the love

நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் பாஜக வேட்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக பாஜக தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கோவையில் முன்னாள் மாவட்ட தலைவர் சிங்கை சட்டமன்ற பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் கோவை காமராஜர் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் நடனமாடி பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடினர்.

தொடர்ந்து சிங்கை சட்டமன்ற பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கோவையில் பாஜக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் வெற்றி பெற்றதாகவே கருதி நாங்கள் கொண்டாடுகிறோம். அண்ணாமலை பெறப் போகும் வெற்றி, இந்தியாவே கூர்ந்து கவனிக்கப் போகும் வெற்றியாக இருக்கும். குறைந்தபட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

திராவிட கட்சிகளின் வேட்பாளர்களின் டெபாசிட்டை இழக்கச் செய்வோம். ஆறு மாதமாகவே அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருகிறோம். இதுவரை இல்லாத அளவு இளம் வாக்காளர் மற்றும் பெண் வாக்காளர்கள் இந்த முறை வாக்களிப்பார்கள். அது எங்கள் மாநில தலைவர் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் என்றார். பேட்டியின் போது மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத் ,மாவட்ட துணைத் தலைவர்கள் துரை மோகன்ராஜ், திருக்குமரன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் ஜெய் கணேஷ், மண்டல் தலைவர்கள் மற்றும் மகளிரணி யனர் கலந்து கொண்டனர்.