,

மக்களவைத் தேர்தலால் மாணவர்களுக்கு கூடுதலாக 10 நாள்களுக்கு மேல் கோடை விடுமுறை

school
Spread the love

ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, மக்களவைத் தேர்தலால் கூடுதலாக 10 நாள்களுக்கு மேல் கோடை விடுமுறை அளிக்கப்ப்ட்டுள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவன்றே, ஒரே கட் டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. எனவே, தேர்தல் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் பள்ளி இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
வழக்கமான தேர்தல் அட்டவணையை எடுத்துக் கொண்டால், பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 22 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது பொதுத் தேர்தலை முன்னிட்டு, பள்ளி ஆசிரியர்கள், வாக்குப்பதிவுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள ஏதுவாக, ஏப்ரல் 12-ம் தேதிக்குள் இறுதித் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் முடிந்ததும், அவர்கள் 23-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பப்படுவார்கள், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அதன்படி, பள்ளியில் கடைசி பணி நாள் என்பது ஏப்ரல் 26-ம் தேதியாகும். மேலும், பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால், பள்ளிகள் திறக்கப்படுவதும் தள்ளிப்போகலாம் என கருதப்படுகிறது.
கடந்த ஆண்டும் கூட, கடும் கோடை வெப்பம் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஒரு சில வாரங்கள் தள்ளிப்போயின. எனவே, இந்த ஆண்டு சூழ்நிலையை கருத்தில்கொண்டு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.