,

காரியாபட்டி தண்டியனேந்தல் அரசு பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா
Spread the love

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், தண்டியனேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள் பாண்டி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஆனந்தவேல் முன்னிலை வகித்தார்.

தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். விழாவில், பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜேஷ் பாபு ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில், முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகர், கிராம அம்பலம் முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வம், பேராசிரியர் பெருமாள், ஆசிரியர் பயிற்றுநர் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் . ஆசிரியர் சாரதா நன்றி கூறினார்.