பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதிக்கு பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியலில், கட்சியின் மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் பி.எஸ்.செல்வக்குமார் முதன்மையாக உள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதி மக்களின் தேவைகள் என்னனென்ன என்பதை பற்றி பி.எஸ்.செல்வக்குமார் கூறிய தாவது :
கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வ தேச அந்தஸ்து பெற முந்தைய 2010- ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமை யிலான மத்திய கூட்டணி ஆட்சியில் போது, திமுக தலைமையிலான மாநில அரசு,600 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தது. ஆனால்
600 ஏக்கர் நிலம் இன்று வரை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கபடவில்லை.
கோவை மாநகரில் சர்வ தேச வியாபார,சுற்றுலா தொடர்புகள் விரிவடைய வேண்டுமெனில்,கோலாலம்பூர், தோகா, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி விமானம் இயக்கப்பட வேண்டும். நீலம்பூர் முதல் மதுக்கரை வரையிலான எல்&டி பைபாஸ் சாலை
டோல்கேட் இல்லாமல் 6 வழி சாலையாக மாற்ற வேண்டும். சிந்தாமணிபுதூர், சிங்காநல்லூர், கணபதி,சரவணம்பட்டி, தடாகம் சாலை இடையார்பாளையம், சாய் பாபா கோயில் ஆகிய பகுதிகளில் 4 வழி மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். இருகூரில் லாரி, ரயில், விமானம் ஆகியவற்றில் சரக்குகளை ஏற்றி, இறக்க ஒருங்கிணைந்த சரக்கு முனையம் அமைக்கப்பட வேண்டும். விசைத்தறிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் ஐந்து கிலோ வாட் வரையிலான சூரிய மின்சக்தி வசதி வழங்க வேண்டும். சூலூரில் ஜவுளி மொத்த விற்பனை சந்தை வளாகம் அமைக்க வேண்டும். சித்ரா ஆராய்ச்சி மையத்தில் விசைத்தறி உற்பத்தி ஆராய்ச்சிக்கென கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் தென்னை, பனை விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்க கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும். பாமாயில் பயன்பாட்டுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் பயன்பாடுகள் அதிகரிக்க முழு முயற்சிகள் எடுக்க வேண்டும். கோவையில் புகழ்பெற்ற பம்ப் செட்களை உலகின் அனைத்து நாடுகளிலும் ஏற்றுமதி செய்வதற் கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
திருப்பூர் பின்னலாடைகள் தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட் களும் கோவை யில் தயாரி த்தால் இறக் குமதிசெய் வதை குறைக்கலாம். பாது காப்புத்துறை தளவாடங்களின் வடிவமைப்பிற்கு சிறப்பு மையம் வேண்டும். காஞ்சி மாநதி என்று அழைக்கப்படும் நொய்யல் நதியில் கழிவுகளை கலப்பதை தடுப்பதற் காக ரூ.1000 கோடி யில் திட்டம் செயல் படுத்த வேண்டும். பள்ளபாளையம் முதல் பொங்க லூர் வரை நிலத்தடி நீர் செறிவூட் டும் திட்டம் ஆனைமலை- நல் லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்த வேண்டும். சின்ன வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடையை விலக்க வேண்டும். கொப்பரை தேக்காய்க்கு கிலோ 10 ரூபாய் மானியம் வங்கிகள் மூலம் அளிக்க முயற்சி எடுக்க வேண்டும் உள்ளிட்டவைகளை பெரும் நம்பிக்கை ததும்ப
பி. எஸ். செல்வக்குமார் கூறினார்.
கோவை தொகுதி மக்களின் தேவைகள் என்ன -பாஜக மாநில தொழில் பிரிவு நிர்வாகி பி.எஸ்.செல்வக்குமார்

Leave a Reply