,

மை வி3 ஆட்ஸ் நிறுவன உரிமையாளர் உள்பட 150 பேர் கைது

myv3
Spread the love
மை வி3 ஆட்ஸ் நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்புவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்ற அதன் உரிமையாளர் சக்தி ஆனந்த் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மை வி3 நிறுவனம் விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்தி ஆனந்த் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சக்தி ஆனந்த் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை விட்டு அகல மறுத்ததால் சக்தி ஆனந்த் உட்பட அவரது ஆதரவாளர்கள், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.