கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், “கேலோ இந்தியா-2024” விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனைப் படைத்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்தார். கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள ராணுவ தலைமையிட நிர்வாக அதிகாரி லூடினென்ட் கலோனெல் ஈ.கே. பிஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாதனைப் படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இதன்படி, புதுடெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம் நிதி மற்றும் கணக்கியல் இரண்டாமாண்டு மாணவி என்.வி.பவ்யா, புதுடெல்லி என்.சி.சி. தல்சானிக் முகாமில் தேசிய மாணவர் மாணவர் படை சார்பில் பங்கேற்ற பி.எஸ்சி. மின்னணுவியல் மூன்றாமாண்டு மாணவர் கே.ராகுல், பி.எஸ்சி. கணினி அறிவியல் இரண்டாமாண்டு மாணவர் ஜி.டி. நரேந்திர பிரசாந்த் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
இதேபோல் தேசிய மாணவர் படையினருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனைப் படைத்து வரும் பி.காம். ஐ.டி. மூன்றாமாண்டு மாணவர் எஸ்.திவாகர், கேலோ இந்தியா பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பி.காம். பன்னாட்டு வணிகம் முதலாமாண்டு மாணவர் எம்.ஸ்வஸ்திக், சைக்கிள் பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற பி.எஸ்.சி. சி.எஸ்.டி.ஏ. துறை முதலாமாண்டு மாணவர் ஜெ.மைக்கேல் ஆண்டனி ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் கர்னல் முனைவர் ஈ.விவேக், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.பிரகதீஸ்ரன், அ.சுபாஷினி, முனைவர் ஆர்.நாகராஜன், முனைவர் ஏ.சஹானா ஃபாத்திமா, முனைவர் யு.பிரவீன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா

Leave a Reply