பதிவுத்துறையில் 11 அரசாணைகள் வெளியிடாமல் மறைத்தது ஏன்? – திமுக அரசை கடுமையாக கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்

Spread the love

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு பதிவுத்துறையில் நடைபெறும் பதவி உயர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர்,
“பதிவுத்துறை உதவித் தலைவர் பதவி உயர்வுப் பட்டியல் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தயாரிக்கப்படவில்லை. 2009–10 முதல் 2019–20 வரை இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக அரசு கூறினாலும், அதனைப் பணியாளர்களுக்கு வழங்கவோ பொதுவெளியில் வெளியிடவோ செய்யவில்லை.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை (H2) எண் 22 முதல் 32 வரை உள்ள 11 அரசாணைகள் இன்று வரை மறைக்கப்படுவதற்குக் காரணம் என்ன? அதை திமுக அரசு விளக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.

மேலும், “சில தகுதியான சார்பதிவாளர்களின் பெயர்கள் விடுக்கப்பட்டுள்ளன; தகுதியின்றி பதவி உயர்வு பெற்ற 7 பேர் இன்னும் பதவி வகிக்கின்றனர். இதை அரசு விளக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, “உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பணிமூப்புப் பட்டியலை உடனடியாக வெளியிட்டு, அதனைப் பின்பற்றி பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *