தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடக்கம்!

Spread the love

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நடவடிக்கை, வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல்களை முன்னிட்டு மிக முக்கியமானதாகும்.

சமீபத்தில் பீகாரில் இந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படும். இறுதி பட்டியல் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. மேலும், இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்ய திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.