, ,

அரிய வகை தங்கப்புலி – படம் பிடித்த கோவை இளைஞர்

tiger
Spread the love

அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் கோவையை சேர்ந்த 25 வயதான கௌரவ் ராம்நாராயணன், இவர் www.thewilside.in என்ற பயண நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகளுடன் பூங்காவின் பகோரி மலைத்தொடரின் மேற்குப் பகுதியில் ஒரு தனியார் புகைப்படச் சுற்றுப்பயணத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது தான் அந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது.
இது குறித்து கௌரவ் ராம்நாராயணன் கூறுகையில், “மாலை 4 மணி இருக்கும். அப்போது மான்கள் கத்தும் சத்தம் கேட்டது. தொலைவில் அதைக் கண்ட எங்கள் சுற்றுலா வழிகாட்டி புத்தேஷ்வர் கோன்வார் ஜீப்பை நிறுத்தினார். சில நொடிகளில் சுமார் 600 முதல் 700 மீட்டர் தூரத்தில் தங்கப் புலியைப் பார்த்தோம்.
என்னால் முடிந்த அளவு புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். திடீரென்று புலி எங்களை நோக்கி நகர ஆரம்பித்தது. அது 60 முதல் 70 மீட்டர் வரை வந்தது. நான் புகைப்படம் எடுப்பதை நிறுத்தவில்லை. இது எங்கள் அனைவருக்கும் மிகவும் உற்சாகமான மற்றும் மறக்க முடியாத தருணம்” என்று கௌரவ் கூறினார்.
ராம்நாராயணன் கிளிக் செய்த தங்கப் புலியின் புகைப்படத்துடன் “மகத்தான அழகு!” என்று குறிப்பிட்டு அஸ்ஸாம் முதல்வர் ‘எக்ஸ்’ தளத்தில் ஹிமந்த பிஸ்வா ஷர்மா வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *