கோவை நன்னெறிக் கழகத்தின் 67-ம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா ரேர்ஸ் கோா்ஸில் உள்ள காஸ்மாபாலிட்டன் கிளப்பில் கடந்த 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நன்னெறிக் கழகத் தலைவா் எம்.என்.பத்மநாபன் அனைவரையும் வரவேற்று பேசினார்
அவர் தமது வரவேற்புரையில், 67 ஆண்டுகளுக்கு முன் என்ன நோக்கத்திற்காக நன்னெறி கழகம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்து வருகிறது.
இதற்காக அனைத்து நிர்வாகிகளையும் மனதார நன்றி கூறிக் கொள்கிறேன்.
கோவையில் நூல்கள் என்னும் அறிவு திருக்கோவிலை உருவாக்கி அனைவரையும் சிந்திக்க வைத்துக் கொண்டிருக்கும் விஜயா வேலாயுதம், ஆங்கில பேராசிரியர், கவிதை, இலக்கியம், பத்திரிகை ஆசிரியர் என பன்முக தன்மை கொண்ட பெ. சிதம்பரநாதன் ஆகிய இரு பெரும் ஆளுமை
களுக்கு விருது அளிப்பதில் நன்னெறிக்கழகம் பெருமைப்
படுகிறது. விழா தலைமை வகிக்கும் தொழிலதிபர் இயாகோகா சுப்பிரமணியம், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், மரபின் மைந்தன் முத்தையா, நன்னெறிக் கழக நிர்வாகிகள், கோவைல் உள்ள இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட அனைவரையும் நன்னெறி கழகம் மனதார வரவேற்கிறது. வாழ்விற்கு நல்ல நெறி அளிக்கும் போதனை
களையும், படைப்புகளையும், அதனை படைப்போரையும் நன்னெறி கழகம் தொடர்ந்து பாராட்டிக் கொண்டே இருக்கும் என பேசினார்.
அயோத்தி ராமர்
இவ்விழாற்கு தலைமை வகித்த தொழிலதிபர் இயாகோகா சுப்ரமணியம் பேசும் போது, கடந்த 75 ஆண்டுகளாக கோவையில் பள்ளிகள், கல்லூரிகள், பெரிய தொழில், நிறுவனங்கள், திருக்கோவில்கள், மருத்துவ மனைகள் ஆகியவற்றினை உருவாக்கிய வர்களை இந்த நன்னாளில் கொண்டாடுவோம்.
உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் உன்னத விழாவாக அயோத்தி மாநகரில் பால ராமரின் பட்டாபிஷேக விழா நடைபெறும் இன்றைய சரித்திர நிகழ்வை நாமும் கொண்டாடுவோம்.
உயர் தனி செம்மொழியான நம் தாய்மொழி கம்ப நாட்டாள் வனையும், வள்ளுவனையும் மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. உலகின் பல பகுதிகளில் வாழும் குழந்தைகள், நமது தாய்மொழி சிறப்பினையும் ஆன்மீக சிந்தனைகளையும், இதிகாச இலக்கிய, புராணங்களையும் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பனை உலக மேடை களுக்கு கொண்டு சென்று புகழ் பரப்பிய எழுத்தாளர் நாஞ்சில்நாடன், மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் சிறப்புக்குரியவர்கள்.நம் தமிழ் மனமும், இலக்கிய செறிவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று கொண் டிருக்கும் படைப்பாளர் சிதம்பரநாதன், பதிப்பாளர் விஜயா வேலாயுதம் ஆகியோர் நன்னெறி கழக விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்கள்.
நம் பாரத நாட்டின் ஆன்மீக சிந்தனை உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் இந்தியர்கள், ராமா யணத்தையும், ராமபிரானையும் தங்களது அடையாளங்களாக கொண்டு வாழ்ந்து
வருகின்ற னர். இன்று விருது பெரும் ஆளுமை களுக்கு வெகு நாட்களாகவே விருது கொடுக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். அது தற்போது நிறைவேறி இருக் கிறது. இதனை செயல்படுத்திய நன்னெறிக்கழக நிர்வாகி களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் என குறிப்பிட்டார்.
வானம்பாடி கவிஞர்
எழுத்தாளா் நாஞ்சில் நாடன் விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசுகையில், விருது பெற்ற விஜயா வேலாயுதம் அண்ணாச்சியை கடந்த 35 ஆண்டுகளாக தெரிந்தவன். வேலாயுதம் அண்ணாச்சி எனக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் .
எனக்கு சொந்த வீடு இருப்பதற்கு காரணமாக விளங்கியவர் அவர் .தகுதி படைத்த ஒருவருக்கு நன்னெறி கழகம் விருது வழங்குவதை பெருமைப்படுகிறேன்.
வானம்பாடி இயக்க கவிஞர்களுள் சிறப்புப் பெற்றவர் கவிஞர் சிதம்பரநாதன்.
வானம்பாடி கவிஞர்களில் சிற்பி, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான்,புவியரசு உள்ளிட்டோர் தமிழ் பேராசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள்.
ஆனால் சிதம்பரநாதனோ ஆங்கில பேராசிரியர்.
அவரது தமிழ் கவிதைகள் கூர்மையானவை.தமிழ் செழுமை வாய்ந்தவை.
அவர் ஆசிரியராகக் கொண்ட ஓம் சக்தியில் திறமையாளர்களை ஊக்குவிப்பதில் தலைசிறந்தவர். எனது எழுத்துக்களையும் ஓம் சக்தி இதழில் வருவதற்கு அனுமதி அளித்தவர். நன்னெறி கழகம் அளிக்கும் விருத்தாளர்கள் இருவரும் சாதனையாளர்கள்.
விருது கொடுத்து பெருமை சேர்க்கும் நன்னெறி கழகத்திற்கு வாழ்த்துக்கள் என பேசினார்.
கலங்கரை விளக்கம்
தொடர்ந்து கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா வாழ்த்தி பேசும் போது, படைப்பாளி, பதிப்பாளர் என்ற இருபெரும் ஆளுமைகளை வாழ்த்துவதில் மகிழ்ச்சியே. பதிப்பகங்கள் என்றால் சென்னை தான் என்கின்ற நிலையை மாற்றி கோவையிலும் பதிப்பகம் தொடங்கி புதிய தடம் பதித்தவர். வானதி பதிப்பக திருநாவுக்கரசுக்கு பிறகு பதிப்புலகில் மாபெரும் பீஷ்மராக விளங்கி வருகிறார்.
ஒரு நூலினை வாசித்து விட்டு, அதில் மனம் உருகி அழுது விடுவார்.
சக பதிப்பாளரிடம் பேசும் போது, வியாபாரம் குறித்து பேசாமல் என்ன புத்தகம் படித்தீர்கள் என விசாரிப்பதிலும் மட்டுமே காதல் கொண்டவர்.
வாசிப்பு பழக்கம் பரவலாக்க வேண்டும் என்கின்ற வேட்கை தனியாதவர்.
புத்தக திருவிழா என்கின்ற நிகழ்வை மாற்றி “வாசகர் திருவிழா” என்கின்ற மாபெரும் விழாவினை ஆண்டுதோறும் நடத்தி ,அனைவரும் அறிவுலவாதிகளாகும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருபவர் . பதிப்புலக கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருபவர்.
தமிழ் படைப்புலகவாதி களை, தொடர்ந்து ஊக்குவிக்கும் விஜயா வேலாயுதத்திற்கு இந்த விருது மிகச் சிறந்த ஊக்குவிப்பாக திகழும்.
விருது பெற்ற சிதம்பரநாதன், தனது கவிதைகளை கவியரங்கில் படைப்பதையே முதன்மையாக விரும்புபவர்.
கவியரங்கில் அவரது புதுக்கவிதைகள் களைக்கட்டும். அவரது கவிதைகளில் உண்மையான உயிரோட்டமும், உயிர்ப்பு இருக்கும். வானம்பாடி கவிஞர்களுள் வாட்டம் இல்லா கவி வழங்கியவர். கவிதைகளுக்கு அடையாள மாக திகழும் கவிஞர் சிதம்பரநாதனுக்கு நன்னெறிக் கழகம் வழங்கும் விருதுக்கு பெரிதும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஏற்புரை
முன்னதாக நிகழ்ச்சியில், பதிப்பகப் பணியில் சிறந்து விளங்குவதற்காக கோவை விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதத்துக்கு ‘நூல் நெறிச் செம்மல்’ விருதினையும், தமிழ்ப் பணியில் சிறந்து விளங்குவதற்காக கவிஞர் பெ.சிதம்பரநாதனுக்கு
‘தமிழ் நெறிச்செம்மல்’ விருதினையும் நன்னெறிக் கழகத் தலைவா் எம்.என்.பத்மநாபன் வழங்கினாா். இதையடுத்து, மு.வேலாயுதம், சிதம்பரநாதன் ஆகியோர் ஏற்புரையாற்றினா்
விஜயா மு. வேலாயுதம் பேசுகையில், நல்ல படைப்புக்கள் வாசகர்கள் மத்தியில் இன்றும் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
என்றாலும் வாசிக்கும் திறன் தற்போது குறைந்து வருவது பெரும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. முக்கிய மாக குழந்தைகளுக்கு நூல்கள் படிப்பதன் விழிப்புணர்வை அரசாங்கம் முதல் கொண்டு அனைவரும் ஏற்படுத்த வேண்டும்.
அதிகமானோர் வாசிக்கும் நிலை உருவானால் அறிவாற்றல் பெருகும் என்பதில் ஐயமில்லை.
விஜயா பதிப்பகம் சார்பில் சிறந்த படைப்பாளிகளை உருவாக்கிக் கொண்டே இருப்போம்.ஊக்குவித்துக் கொண்டே இருப்போம்.
விருது வழங்கிய நன்னெறி கழகத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் உன் மனதார நன்றியுடன் வாழ்த்துகிறேன் என பேசினார்.
விருது பெற்ற கவிஞர்
பெ.சிதம்பரநாதன் பேசுகையில், கவிதைகள் மூலம் பெறும் எழுச்சியை ஏற்படுத்த முடியும்.
சிறந்த கவிதைகளுக்கு அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு கொண்டே வருகிறது. படைப்பாளிகளுக்கு இது போன்ற விருதுகள் பெரும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது.
விருது வழங்கி பாராட்டிய நன்னெறி கழகத்திற்கும், வாழ்த்திய பெருமக்களுக்கும் மிக்க நன்றி என பேசினார்.
இவ்விழாவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவை நன்னெறி கழகத் தலைவர் எம். என். பத்மநாபன், செயலாளர் பி.ஜெயசந்திரன் மற்றும் நன்னெறி கழக நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.
நன்னெறிக் கழக 67-ம் ஆண்டு விழா சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு

Leave a Reply