உலகளாவிய சைபர் பாதுகாப்பு மாதம் மற்றும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்திய கணினி சங்கம் மாணவர் கிளை மற்றும் கோவை நகர காவல்துறையுடன் இணைந்து, கோவை ரேஸ்கோர்ஸில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம் வெற்றிகரமாக நடைபெற்றது.
கோவை துணை காவல் ஆணையர் (தலைமையகம்) எம். திவ்யா, ஐபிஎஸ், நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சி.வி. ராம்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ. சௌந்தர்ராஜன், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் பொறுப்பான டிஜிட்டல் நடத்தையை ஊக்குவிப்பதற்கும் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சியை எடுத்துரைத்தார்.

மேலும் ,ரேஸ்கோர்ஸில் தொடங்கிய நடைப்பயணத்தில், ஐநூறுக்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரியின் மாணவ உறுப்பினர்கள் பங்கேற்றனர், அவர்கள் சைபர் சுகாதாரம், பாதுகாப்பான ஆன்லைன் நடைமுறைகள் மற்றும் டிஜிட்டல் குற்றங்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் பதாகைகள் மற்றும் வாசகங்களை ஏந்திச் சென்றனர். கோவை நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அழகுராஜா, துணை ஆய்வாளர்கள் சுகன்யா, பிரியங்கா, தாமரைக்கண்ணன், கல்லூரியின் இந்திய கணினி சங்க மாணவர் கிளை தலைவர் டாக்டர் பி. பெருமாள் மற்றும் நடைப்பயணத்தின் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். ஹரிஹர கோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.



Leave a Reply