,

ஜோஸ் ஆலுக்காஸில் நகைகளை கொள்ளயடித்த கொள்ளையன் சிக்கினான்

Jos Alukkas
Spread the love

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடையில் செவ்வாய்க்கிழமை 200 பவுன் தங்க-வைர நகைகளை கொள்ளயடித்த கொள்ளையன் சிக்கினான்.

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடையில் செவ்வாய்க்கிழமை 200 பவுன் தங்க-வைர நகைகளை கொள்ளயடித்த ஒருவன் கொள்ளையடித்து போன நிலையில், இந்த கொள்ளையனை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஸ் தலைமையில் உதவி கமிஷனர் கணேஷ், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது .

இவர்கள் கொள்ளை நடந்த இடத்தில் இருந்து பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில் கொள்ளையன் கொள்ளையடித்த நகைகளுடன் பேருந்தில் பொள்ளாச்சிக்கு சென்றது தெரியவந்தது  இதை தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்தபோது கொள்ளையனை கைது செய்தனர். விசாரணையில் அவன் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (26) என்பது தெரியவந்தது. இவனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆனைமலையை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் சிறையில் இருந்த போது நட்பு ஏற்பட்டது. பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஆனைமலையில் உள்ள சுரேஷ் வீட்டுக்கு இவன் அடிக்கடி சென்று வந்ததும் தெரிய வந்தது. கொள்ளையனிடமிருந்து 3 கிலோ நகைகள் மீட்கப்பட்டன.கொள்ளை நடந்த 2 நாட்களில் கொள்ளையனை துரிதமாக கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.