அறுவை சிகிச்சை துறை மற்றும் சமூக நலனுக்கான அவரது பங்களிப்பிற்காக கோவை எல்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி எஸ் ராஜன் கோயம்புத்தூர் மில்லினியத்தின் ரோட்டரி கிளப் மூலம் வழங்கப்படும் “தொழில்சார் சிறப்பு விருது – 2024” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த் தொழில்சார் சிறப்பு விருது ரோட்டரி சங்கத்தால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். தேர்ந்தெடுக்கப்படும் நபருடைய தொழில் மற்றும் சமூக பங்களிப்புகளை ஆய்வு செய்த பிறகு, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நபருக்கு மட்டும் வழங்கப்படும் இந்த அங்கீகாரம் ரோட்டரியின் உயர்ந்த விருதாகும்.
விழாவிற்கு ஐஎம்ஏ, மருத்துவமனை வாரிய தலைவர் டாக்டர் ஏ.கே.ரவிக்குமார் தலைமை வகித்தார்.
ரோட்டரி 3201 இயக்குனர் Rtn கோகுல்ராஜ், உதவி கவர்னர் Rtn ஸ்ரீராமுலு, Rtn ரமேஷ் சிஜிஆர், Rtn அமுல்ராஜ் தொழில் சேவை இயக்குனர், Rtn யுவராஜ், தலைவர், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மில்லேனியம் செயலாளர் Rtn சுந்தரமூர்த்தி ஆகியோர் டாக்டர் ராஜனுக்கு விருது வழங்கி பாராட்டினர். டாக்டர் ஏ கே ரவிக்குமார், காஸ்ட்ரோஎன்டாலஜி துறையில் டாக்டர் ராஜனின் 30 ஆண்டுகால பயணம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு திட்டத்திற்கான அவரது புகழ்பெற்ற திட்டம் பிராஜக்ட் யெஸ் மற்றும் ஆரம்ப நிலை புற்றுநோயின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தினார்.கோவிட் மற்றும் இயற்கை பேரிடர்களின் போது டாக்டர் ராஜனின் மற்ற சமூக பங்களிப்புகள் பாராட்டப்பட்டன. வடுவற்ற அறுவை சிகிச்சை துறையில் அவர் செய்த சாதனைகளை Rtn ராமநாதன் குறிப்பிட்டார்.
எல்சி நிர்வாக இயக்குநர் டாக்டர் வித்யா ராஜன், எல்சி மருத்துவக் குழுவினர், டாக்டர் கந்தசாமி, டாக்டர் கார்த்திக், ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
Leave a Reply