கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அன்னூர் தெற்கு ஒன்றியம், அன்னூர் பேரூராட்சி, அன்னூர் வடக்கு ஒன்றியம் சார்பில், கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் வருகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தலின் பேரில், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கோவை பாரதிய ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் கரு.மாரிமுத்து, மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.



Leave a Reply