இந்திய திரையுலகத்தில் 50 ஆண்டுகளாக கலக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த், தற்போது வரை 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது இந்த ஐம்பதாண்டு சாதனைக்கு திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் இருந்து பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்த வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் (முன்னைய ட்விட்டர்) பக்கத்தில்,
“1975-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வெளியாகியுள்ள ‘கூலி’ வரை 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, ஐம்பதாண்டு காலம் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்ற எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது பாராட்டுகள்!
அவர் மேலும் பல்லாண்டுகள் நல்ல தேக ஆராக்கியத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நல்வாழ்த்துகள்.“
என்று பதிவு செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரை பயணம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply