தமிழ்நாட்டில் மாதந்தோறும் 1ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தமாக 4,787 டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வருகின்றன. ஒரு ஆண்டில் டாஸ்மாக் மதுபான படைகளுக்கு மொத்தமாக 8 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது தமிழ்நாட்டில் பெரும்பாலான தொழிலாளர்கள் 1ஆம் தேதி சம்பளம் பெற்று வருகின்றனர். அவர்கள் சம்பளத்தை முழுமையாக வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் இந்த முறை ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகிறது. கேரளாவில் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைப் பின்பற்றி தமிழ்நாட்டில் அந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.இந்த அறிவிப்பு முதல்வர் ஸ்டாலினின் சுதந்திர தின உரையில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.



Leave a Reply