அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய காரில் முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட தலைவர் செல்லூர் ராஜுவை ஏற்க மறுத்ததாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 30ம் தேதி, சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்துக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, அவரின் காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த எடப்பாடி, காரில் ஏற வந்த செல்லூர் ராஜுவை “வேண்டாம்… வேறு காரில் செல்லுங்கள்” என கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, எடப்பாடிக்கு செல்லூர் ராஜுவின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
“எடப்பாடி அவர்களுக்குத் தன் மீது எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. பாதுகாப்பு காரணமாகவே வேறு காரில் செல்ல வேண்டியிருந்தது. அந்த நிகழ்வை வைத்து வேறு அர்த்தம் பாக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவினுள் உள்ளமைக்குள் குழப்பம் என்று சமூக வலைதளங்கள் பரப்பிய செய்திக்கு இதன் மூலம் விளக்கம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.



Leave a Reply