கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற, கோவை மாநகர் மாவட்ட திமுக மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாட்டில் இளைஞர் அணியினர் பல்லாயிரக்கணக்கில்,வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ளச் செய்ய ஒருங்கிணைந்து செயல்பட்டு இளைஞரணி மாநாட்டை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஜனவரி 25-1-2024 அன்று, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், பகுதிக்கழகச் செயலாளர்கள் ஆர்.எம்.சேதுராமன்,ப.பசுபதி, மார்க்கெட் எம்.மனோகரன், வி.ஐ.பதுருதீன், சிங்கை மு.சிவா, ஷேக் அப்துல்லா,துரை.செந்தமிழ்ச் செல்வன், மா.நாகராஜ்,இரா.சேரலாதன், கணபதி லோகு, அஞ்சுகம் பழனியப்பன்,கே.எம்.ரவி,எ.எம்.கிருஷ்ணராஜூ,வ.ம.சண்முக சுந்தரம்,பரணி கே.பாக்கியராஜ்,பொதுக்குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் வெ.சசிகுமார்,நோயல் செல்வம், அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Leave a Reply