8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் கோவையில் போராட்டம்

Spread the love

கிடங்கில் இருந்து வரும் ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வருகிறது, எனவும் குற்றச்சாட்டு முன் வைத்துப் ஆர்ப்பாட்டம் !!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளில் பணி புரியும் நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளை தமிழக அரடை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை ஆர்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக முதலவருக்கு மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு வழங்கும் வகையில் நியாய விலைக் கடை பணியாளர் நலனை காக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாய விலைக் கடைகளில் புளூடூத் மூலம் விற்பனை செய்வதை நீக்க வேண்டும், இதனால் காலம் தாமதம் ஏற்படுவதாகவும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து வரும் ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது POS இயந்திரங்களில் ஏற்பட்டு உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றும் நியாய விலைக் கடைகளில் உள்ள பணிச் சுமையை கருத்தில் கொண்டு எடையாளர் ஒருவர் அனுமதிக்கப்பட வேண்டும் அது
வரை வெளிப்பணி மூலம் உதவியாளர் ஒருவரை பணி அமர்த்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *