வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கியது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உட்பட 21 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே பூத் கமிட்டி அமைத்து அதற்கான பட்டியலை சமர்ப்பிக்கும்படி கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்த நிலையில், அதுபற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
Leave a Reply