96 வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பொம்மலாட்டக் கலைஞர்

padmashree
Spread the love

96 வயதிலும் கலை மீது கொண்ட உறுதியும் உற்சாகமும் கர்நாடகாவைச் சேர்ந்த பீமவ்வா ஷில்லேக்யாதரா என்பவரை நாட்டு மக்களுக்கு அடையாளப்படுத்தி யுள்ளது. நீண்ட காலமாக பாரம்பரிய பொம்மலாட்டக் கலையைப் பாதுகாத்து வளர்த்து வந்ததற்காக, சமீபத்தில் அவர் நாட்டின் மூன்றாவது உயரியவிருதான பத்மஶ்ரீ விருதை பெற்றார்.
பத்ம விருது வழங்கும் விழாவில், பீமவ்வா எளிமையாக கையை கூப்பியபடி மேடைக்கு வருகை தந்த போது, விழாவில் இருந்தோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து அவர் விருதைப் பெறும் தருணத்தில், கைதட்டல்கள் அரங்கத்தை அதிர வைத்தன.தகலு கொம்பேயத்தா எனப்படும் லெதர் பொம்மைகள் மூலம் நாடகம் நடத்தும் பாரம்பரிய கலைக்காக பீமவ்வா கடந்த 80 ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்துள்ளார். புராணக் கதைகள், பாட்டுகள் மற்றும் கைவண்ணக் காட்சிகள் எல்லாம் கலந்து அவரின் நிகழ்ச்சிகள் மக்களைக் கவர்ந்துள்ளன. மக்கள் வரவேற்பு குறைவாக இருந்த போதிலும், கலையின் மீதுள்ள அன்பால் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன், இக்கலையை மற்றவர்களுக்கும் கற்பித்து வருகிறார்.
இக்கலை, ஆந்திராவின்புகழ்பெற்ற தோலு பொம்மலாட்ட கலையை ஒத்ததென்பது குறிப்பிடத்தக்கது. குறைவான வசதிகளுடன் வாழ்ந்தபோதும், மனநிறை
வுடன் தன்னுடைய பாரம்பரியத்தை பாதுகாத்து வந்த பீமவ்வாவின் பங்களிப்பு, கலையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்கிறது.
வயது என்பது வெறும் எண் என்பதை தன்னுடைய வாழ்க்கையால் நிரூபித்த பீமவ்வா, இன்றும் நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து கலையை பரப்பும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டிருக்கிறார். அவர் வாழ்ந்த வாழ்க்கையும், பெற்ற மரியாதையும், பாரம்
பரிய கலைகளை மதிக்கும் சமூகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது.