கோவையில் கடந்த சனி,ஞாயிற்றுக்கிழமையில் நடைபொற்ற கொங்கு உணவுத் திருவிழாவை நடத்தியது தமிழ்நாடு கேட்டரிங் அசோஸியேஷன் என்கிற அமைப்பு ஆகும். 800
ரூபாய்க்கு 400 வகையான உணவு வகைகள் வழங்கப்
படும் என்று அறிவிக்கப்பட்ட
தால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது. நல்ல சாப்பாட்டுக்கு ஆசைப்படும் மக்களின் இயல்புதானே இது கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்கே அங்கு சென்று ஆஜர் ஆகியுள்ளனர். அப்போதே, தாறுமாறாக கூட்டம் அரங்கத்தில் காணப்பட்டுள்ளது.
கார்களை பார்க் செய்து விட்டு, டேக் வாங்கிக்
கொண்டு அடித்து பிடித்து மக்கள் உள்ளே ஓடியுள்ள
னர். பிளேட் வாங்கவே வரிசையில் ஆயிரக்கணக்
கான மக்கள் நின்றுள்ளனர். ஒரு டிக்கெட்டுக்கு ஒரு பிளேட் கொடுத்துள்ளனர். பிளேட் வாங்க கூட் ஒரு
வருக்கு 20 நிமிடங்கள் பிடித்துள்ளது.
சரி… பிளேட்டை வாங்கி விட்டு நாக்கில் எச்சில் ஊற உணவை வாங்க போனால் டீ ஸ்பூன் மாதிரி கரண்டி வைத்து தட்டில் உணவை எடுத்து வைத்துள்ளனர். ஒரே தட்டில் முதலில் இட்லி மட்டன் குழம்பு, பிறகு இடியாப்பம் குருமா, தோசை தேங்கா சட்னி, பூரி மசாலா அப்புறம் பிரியாணி என டிக்கெட் வாங்கிய அனைவரும் அன்லிமிடெட்டா சாப்பிடா லாம்னு கூறிதான் டிக்கெட் விற்றுள்ளனர். ஆனால், கடைசியில் ஒரு பிளேட்தான் தருவோம்னு சொல்ல அரங்கத்தில் களேபரமாகி போனது. கட்டுக் கடங்காத கூட்டம், அனுபவமில்லாத பணியாளர்கள், பொதுமக்களின் கோபம் என அனைத்துமே கேட்டரர் களுக்கு எதிர் வினையாகி போனது.
ஒரு கட்டத்தில் பொது மக்களே உணவுகளை அள்ளி பையில் போட்டுக் கொள்ள தொடங்கினர். அங்கிருந்த பணியாளர்கள் விட்டால் போதும் என்கிற ரீதியில் ஒதுங்கிக் கொண்ட தையும் காண முடிந்தது. கடைசியில் உணவுத் திருவிழா காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்த கதையாக மாறி போனது. கோவையில் கடந்த ஒரு வார காலமாக இந்த சம்வம்தான் ஹாட் டாபிக் ஆக ஓடிக் கொண்டி ருக்கிறது. கோவையன்சை எல்லோரும் ஏமாத்துறாங்க. சாப்பாடும் ஏமாத்துது… புயலும் ஏமாத்ததுனு சமூக வலைத்தளங்களில் மீம்கள் பறந்தன.
சரி… கோவை உணவு திருவிழாவில் குழப்பம் நடந்தது எங்கே?
இந்த உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தது கொங்குப் பகுதியின் பல பிரபலமான கேட்டரர்கள் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ்நாடு கேட்டரிங் அசோசியேஷன்தான். இதில் மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனங்கள் போல பல்வேறு பெரிய கேட்டரிங் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. சர்வசாதாரணமாக இந்த நிறுவனங்கள் 50,000 நபர்கள் வரை சமைத்து பரிமாறும் அளவுக்கு திறன் கொண்டவை என்பதில் மாற்று கருத்து இல்லை. கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதி மக்களின் விருப்பத்திற்குரிய சமையல் கலைஞர்கள் இவர்கள் என்றாலும் மிகையல்ல. கோவை நகரின் செல்வ செழிப்பு மிக்கவர்கள், தொழிலதிபர்கள் வீட்டு விசேஷங்களுக்கு சமைக்கும் பெரும் காண்டிராக்டர்களும் இவர்கள்தான். இளையராஜாவிடம் கால்சீட் வாங்கி விட்டு, படம் தயாரிக்க முடிவு செய்யும் தயாரிப்பாளர்கள் போல, இவர்களிடம் தேதி வாங்கி தங்கள் வீட்டு திருமண தேதியை முடிவு செய்யும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற்ற சமையல் கலைஞர்கள்தான்.
இந்த கேட்டரிங் நிறுவனங்கள் ஓராண்டில் கோடிக் கணக்கில் டர்ன் ஓவர் செய்பவை. இவர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடே வியக்கும்படி ஒரு உணவுத் திருவிழா நடத்த வேண்டும் என்கிற முனைப்பில் முதன் முறையாக ஒரு உணவுத் திருவிழா நடத்த முடிவு செய்தனர். ஆனால், அவர்களின் ஆசை நிராசையாக மாறி போனது. மாறாக இன்று அவச் சொல் வாங்கி முகத்தை வெளியே காட்டவே தயங்கி நிற்கிறார்கள். பெரிய பெரிய வீட்டுத் திருமணங்களுக்கு சமையல் செய்வது என்பது வேறு. பொதுமக்கள் கூடும் கண்காட்சிகளின் உணவு திருவிழா நடத்துவது என்பது வேறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் குழப்பத்துக்கு மொத்த காரணம். இந்த அனுபவத்தை பெற இவர்கள், அதிக விலை கொடுத்துள்ளனர் என்பதுதான் முற்றிலும் உண்மை. முறையான கட்டமைப்பு ஏற்படுத்தி விட்டுதான் இது போன்ற உணவு திருவிழாவை நடத்த வேண்டும் என்பதை அறியவில்லையா? என்பதற்கும் நம்மிடத்தில் விளக்கமில்லை. அடுத்த முறையாவது, பெற்ற அனுபவத்தை கொண்டு சிறந்ததொரு உணவு திருவிழாவை தமிழ்நாடு கேட்டரிங் அசோசியேசன் நடத்தி காட்டும் என்று நம்பிக்கை கொள்வோம்!
800 ரூபாய்க்கு 400 உணவு வகைகள் எச்சில் ஊற சென்ற மக்களுக்கு டீஸ்பூன்… ஹிஹி !

Leave a Reply