கோவை சிங்காநல்லூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியின் நூற்றாண்டு விழா, ஆண்டு விழா, மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆகியவை ஒரே நேரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், 1950 முதல் 1960 வரை இப்பள்ளியில் கல்வி பயின்ற 40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் தங்கள் பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில், அவர்கள் புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் போன்ற கல்விச்சிறப்புக்கான பொருட்களை கொண்டு வந்தனர்.
பின்னர், ஆரம்பப்பள்ளியில் பயின்ற நாட்களை நினைவு கூரும் வகையில், ஆசிரியர் வகுப்பறையில் வருகை பதிவு செய்யும் போது, முன்னாள் மாணவர்கள் “உள்ளேன் அம்மா” என கூறி, 75 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை மீண்டும் உயிர்ப்பித்தனர்.
மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி, வகுப்பறையில் பாடம் நடத்த, முன்னாள் மாணவர்கள் மேசையில் அமர்ந்து பாடம் கேட்டனர். அதோடு, தமிழ் மொழியின் முதல் எழுத்துக்கள் “அ-அம்மா, அப்பா” போன்றவற்றை ஆசிரியர் கரும்பலகையில் எழுத, 70 முதல் 75 வயதான முன்னாள் மாணவர்கள் அதைப் படித்து, ஒப்பித்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வு, பழைய நினைவுகளை மீட்டெடுத்து, மாணவிப்பருவ நினைவுகளை மீண்டும் அனுபவிக்கச் செய்த ஒரு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
Leave a Reply