25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி.. .. – அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

MSK
Spread the love

உலக தமிழ் வளர்ச்சி மாநாட்டில் பெறப்படும் ஆலோசனைகளை பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் உலக தமிழ் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.   நிகழ்ச்சி மேடையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கலைஞர் தமிழுக்கு செய்தது ஏராளம். தமிழ் வழியில் படித்தால் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கட்டணத்தில் விலக்கு, குறிப்பிட்ட அரசுப் பணிகளில் சேர தமிழ் வழியில் படித்தால் முன்னுரிமை, கல்வி நிறுவனங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடல்களை பாட வேண்டும். மாநிலத்தின் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தவர் நம் முதல்வர்.  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்தி இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 1500 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். தமிழில் உள்ள பெருமைகளை உலகம் முழுதும் கொண்டு செல்ல பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தி பல மொழிகளில், பல நாடுகள் மொழி பெயர்ப்பு செய்ய ஒப்புதல் அளித்து தமிழின் பெருமையை கொண்டு சேர்க்க செயல்பட்டு வருகிறோம். தமிழ் மொழிப் பெயர்ப்பு செய்ய 3 கோடி வரை ஒதுக்கி உள்ளார் முதலமைச்சர்.