219-வது பிறந்த நாள் காணும் கோவை மாநகர் – நீங்கா நினைவுகள் 

Spread the love
கோவைக்கு மகாத்மா காந்தியடிகள் 3 முறை வந்திருக்கார். தெரியுமா? அதில் ஒரு முறை அவர் கோவைக்கு பிப்ரவரி 6, 1934ல் வந்தபோது கோவையின் மிக சிறந்த பொறியியல் மேதை GD நாயுடு அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான போத்தனூர் பகுதியில் உள்ள வீட்டில் தங்கினார். அந்த வீடு இன்று காந்தியடிகள் நினைவாக அப்படியே உள்ளது.
கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முக்கியமானது. இந்த கோவில் கரிகால சோழனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தெரியுமா? கோவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கீழும் இருந்துள்ளது.
கோவை என்றாலே சிறுவாணி தண்ணீர். நம் நினைவுக்கு வரும் அல்லவா? கோவை அருகே உள்ள சிறுவாணி நதி காவேரி நதியின் துணை நதியாகும்.
இந்தியாவின் 3-வது பெரும் பணக்காரர் சிவ்நாடார் கல்லூரி கல்வி கற்றது கோவை  பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில்.
 இவர் மக்கள் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.2042 கோடி தானம் செய்கிறார்.
தென்னிந்தியாவில் நிலநடுக்கம் என்பது அரிதான ஒன்றாக பார்க்கப்பட்ட நிலையில் கோவை அதை அனுபவித்து உள்ளது தெரியுமா?  பிப்ரவரி 8, 1900ம் ஆண்டில் கோவையில் ரிக்ட்டர் 6 அளவில் ஒரு நிலநடுக்கம் கோவை அருகே ஏற்பட்டது. இது தென் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறத
இந்தியாவின் தேசிய கீதமாக ‘ஜன கண மன’ அறிவிக்கப்படுவதற்கு முன்பே,கோவை பீளமேடு
பி.எஸ்.ஜி. சர்வஜன பள்ளிக்கு செப்டம்பர், 1926ல் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வருகை தந்து அங்கு அதை வாசித்தார். அதன் பின்னர் அது அந்த பள்ளியின் கீதமாக பின்பற்றப்பட்டது.
 தென்னிந்தியாவின் முதல் நிரந்தர சினிமா தியேட்டர் கோவையில் தான் கட்டப்பட்டது .  சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரால் 1914 துவங்கப்பட்ட வரைடி ஹால் தியேட்டர்/ டிலைட் தியேட்டர்.
 உலகில் எத்தனை வீட்டு உபயோக பொருட்களை மேலை நாடுகள், ஐரோப்பிய நாடுகள் கண்டுபிடித்திருக்கலாம், ஆனால் முதல் மின்சார கிரைண்டரை உருவாக்கியது கோவையில் தான்.  கோவையை சேர்ந்த சபாபதி என்பவர் தான் 1950 களில் தனது ‘எலக்ட்ரான் எலக்ட்ரிகல்’ எனும் நிறுவனம் மூலம் உருவாக்கினர்.
*நவம்பர் மாதம் 24ம் தேதி 1804 ம் ஆண்டு நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களால் கோவைக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்தது. இதனை கொண்டாடும் விதமாக, *நவம்பர் 24 கோயம்புத்தூர் தினமாக கொண்டாடப்படுகிறது*. இந்த ஆண்டு  219-வது பிறந்த நாள்.   நம் கோவை  மேலும் பொலிவும் செழிப்பும் பெறட்டும் …!