அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் பிரசாரம், வியூகம், பூத் கமிட்டி, வாக்காளர்கள் சேர்ப்பு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. அத்தகவலை த.வெ.க.வி னர் மறுத்து உள்ளனர். 2026-ல் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே திட்டமிட்டுள்ளதாக த.வெ.க.வினர் கூறினர்.
இந்த நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜயின் த.வெ.க. தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:- விஜயுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் 2026-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி இல்லை. தேர்தலில் த.வெ.க. தனித்து களம் காண விஜய் வியூகம் வகுத்துள்ளார்.
விஜய் தனித்து போட்டுயிட்டு ஆட்சி அமைப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply