2026 முதல் புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசின் புதிய உத்தரவு

Spread the love
சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, மத்திய அரசு புதிய இருசக்கர வாகனங்களுக்கு இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்குவது கட்டாயம் என அறிவித்துள்ளது. இது 2026 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும்.

உலகளவில் அதிக அளவில் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள் நிறைவாக இருசக்கர வாகன விபத்துகளால் தான் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக, ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வது குறிப்பிடப்படுகிறது.

ஏற்கனவே, இருசக்கர வாகன ஓட்டுநருடன் பின்னால் அமர்ந்து செல்லும் நபரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் இயல்பாக உள்ள நிலையில், தற்போது அதை மேலும் கடுமையாக பின்பற்ற வைக்கும் விதமாக, புதிய வாகனங்களுக்கு இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், புதிய பைக்குகளில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக் பிரேக்கிங் அமைப்பும் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள், விபத்துகளை குறைக்கும் நோக்கில் அமல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *